திருவள்ளூர், ஜூன் 7- திருத்தணி கிளைச் சிறை யில் உள்ள கைதிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கிளை சிறை யினை வியாழனன்று (ஜீன் 6) உச்ச நீதிமன்றம் அறிவுறுத் தலின்படி முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபு சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள், மோட்டார் வாகன சிறப்பு நீதிபதி சி.சரஸ்வதி, தலைமை குற்றவியல் நடுவர் கே. மோகன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் பி.தீனதயாளன் ஆகியோர் முன்னிலையில் கூட்டாய்வு மேற்கொண்ட னர். கிளைச் சிறையில் அடிப் படை கட்டமைப்பு வசதிகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். சிறைவாசி களிடம் குறைகளே கேட்ட றிந்தனர்.
சிறையில் அடிப் படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, சுற்றுப்புறம், உணவு தரமாக உள்ளதா என்பதை சிறை கைதிகளி டம் கேட்டறிந்தனர். மேலும் மருத்துவர்கள் வருகை பதிவேடு, கைதி ஒப்படைப்பு பதிவேடு, காப்பு புத்தகம் (பாரா), சிறை பதிவேடு, ஆயுத அறை, சமையலறை, சட்ட சேவை மையம் , கைதிகளின் நேர்காணல் அறை, போன்றவற்றையும் பார்வையிட்டனர். மேலும் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவ தற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
ஆய்வு குறித்த அறிக்கை விபரங்கள் பின்னர் சமர்ப்பிக்கப்படும் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில் மாவட்ட கூடுதல் காவல் கண் காணிப்பாளர் அரிக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, துணை கண்காணிப்பாளர்கள், சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறையினர் கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.