districts

img

100 ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாட்டுப்பாதை இல்லை வயல்வெளியில் மனித உடலை சுமந்து செல்லும் அவலம்

திருவள்ளூர், மார்ச் 24- திருவள்ளூர் அருகில் உள்ள கரிக்  கலவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட,   பழைய கரிக்கலவாக்கம் கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வர்கள் பல தலைமுறைகளாக 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  சுதந்திரம் பெற்று 75 ஆண்டு கள் கடந்த போதிலும்,  அவர்களுக் கென்று இருக்கின்ற சுடுகாட்டிற்கு   இறந்த உடலை சுமந்து செல்ல சுடு காட்டுக்கான  பாதை இல்லை. இதனால்,   அக்கிராமத்தில்  யாரேனும்  இறந்து விட்டால்,  இறந்தவரின் உடலை   சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல அருகில் உள்ள தனியார்  விளை நிலங்களில்,  நடவுகளில் இறங்கி செல்ல வேண்டிய அவல நிலை தான் இன்றளவிலும் உள்ளது.  இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதோடு, அடிக்கடி மோதலும் ஏற்படுகிறது.  ஒவ்வொரு முறை மரணம் நிகழும் போதும், மக்களிடையே சண்டை கள் தொடரும். இந்த நிலையில் நிரந்தர மாக சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர வேண்டும் என வரு வாய்த்துறையிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். கலையரசன் திரு வள்ளூர் வட்டாட்சியர் மதியழ கனை வெள்ளியன்று (மார்ச் 24) சந்தித்து  சுடுகாட்டிற்கு சடலங்களை எடுத்துச்செல்ல பாதை அமைத்துத் தருமாறு மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது  கிராம பெரியவர் ரகு, வாலிபர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.