districts

img

நரிக்குறவர் மக்களுக்கு பட்டாகேட்டு மலைவாழ் சங்கத்தினர் போராட்டம்

திருவள்ளூர், மார்ச் 23- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 11வது வார்டில் சுமார் 60 வருடங்களாக 23 நரிக்குறவ இன குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ஒரு சில குடும்பங்களுக்கு மட்டும் பட்ட  தயார் செய்யப் பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து குடும்பங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும், குடி யிருப்புக்குள் மழைநீர் புகாவண்ணம் தடுப்புச் சுவர்  எழுப்ப வேண்டும் உள் ளிட்ட பல கோரிக்கைகள் வலி யுறுத்தி நரிக்குறவர் மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பேரூராட்சியின் தேர்த லுக்கு முன்னதாக பலமுறை  வழங்கப்பட்ட மனுக்களை பேரூராட்சி செயலர் யமுனா வாங்க மறுத்ததாகவும், வாங்கிய சில மனுக்களை நரிக்குறவர் இன மக்கள்  கண்முன்னே கிழித்து போட்ட தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குப் பின்னர் வார்டு உறுப்பினர்க ளின் கூட்டம் திங்களன்று (மார்ச் 21) நடைபெற்றது.  இந்நிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் பகுதி தலைவர் அஜித்  தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்று கையிட்ட நரிக்குறவர்மக்கள் தங்களது கோரிக்கை மனுவை வழங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவர் இன மக்களு டன் புதிதாக தேர்வு செய்யப் பட்ட பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு விரை வில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் இலவச பட்டா  மற்றும் அடிப்படை வசதிகள்  செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவர் இன மக்கள் கலைந்து சென்றனர்.