districts

img

மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறியல்

திருவள்ளூர், ஜூன் 29- கவரைப்பேட்டை பகுதி யில் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி சிபிஐ சார்பில் வெள்ளியன்று (ஜூன் 28) சாலை மறியல் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

மேலும் பல்வேறு தேவைகளுக்காக அன்றாடம் ஆயிரக் கணக்கான மக்கள் வந்து  செல்லும் இடமாக கவரைப் பேட்டை பஜார் உள்ளது. இங்கு நடந்து செல்ல கூட  வழியில்லாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சர்வீஸ் சாலைகள் குண்டும் குழியு மாக உள்ளதால் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் திணறு கின்றனர். பல ஆண்டுகளாக  பணிகள் நடைபெற்று வருகிறது. காலதாமதம் செய்யாமல், மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி சிபிஐ சார்பில் வெள்ளியன்று (ஜூன் 28), சாலை மறியல் நடைபெற்றது.

இதற்கு ஒன்றிய குழு  உறுப்பினர் எம்.ரவிச்சந்தி ரன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் லெனின், மாவட்ட செயலா ளர் கே.கஜேந்திரன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்என்.எஸ்.பிரதாப்சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி.வெங் கடேசன், ஏ.ஷாஹின்ஷா உட்பட பலர் கைதாகினர்.