districts

img

புதிய தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், அதிகத்தூர் கிராமம் அருகில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே பிப் 3 அன்று நீர்வளத் துறை மூலம் சுமார் 200 மீட்டர் நீளம், 1.50 மீட்டர் உயரத்தில் ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார். திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராேஜந்திரன் முன்னிலையில், திருவள்ளூர் கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர்   திலகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.