districts

சாலையில் திரியும் மாடுகள் ஏலம்: திருவள்ளூர் ஆட்சியர் எச்சரிக்கை

திருவள்ளூர், டிச 23 சாலையில் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்டுப்பாடின்றி திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு ஊராட்சியில் அமைக்கப் பட்டுள்ள பட்டியில் அடைக்கப்படுவதுடன், அதன் உரிமையாளர்களுக்கு ரூ.2000 அபராதத் தொகையாக விதிக்கப்படும். இந்த உத்தரவு  25.12.2022 முதல் நடை முறைக்கு வருகிறது. மேலும் பிடிக்கப்படும் கால்நடைகளை 24  மணி நேரத்திற்குள் ரூ.2000 அபராதத் தொகை யாக செலுத்தி, பிரமாண பத்திரம் சமர்ப்பித்த பின்னரே கால்நடைகளை உரிமை யாளர்கள்  கொண்டு செல்லலாம். 24 மணி நேரத்திற்கு பின்பும் உரிமைக் கோரப்படாத கால்நடைகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொது ஏலம் விடப்படும். எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைத்து பராமரிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.