திருவள்ளூர், பிப் 21- ராணிப்பேட்டை மாவட்டம், தொன் போஸ்கோ வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவிகள், திருவள்ளூர் சுற்று வட்டார கிராமங்களில் தங்கி தாங்கள் பயின்ற தொழில் முறைகள் குறித்து, பயிற்சி அளித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக,கீழானூர் கிராமத்தில் ஆளில்லா விமானம் எனப்படும் ட்ரோன்களைப் பயன்படுத்தி உரம் மற்றும் பூச்சி மருந்துகள் தெளிப்பது போல் செயல் முறை விளக்கம் தந்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர், துணை வேளாண் அலுவலர் விவசாயிகள் ஆகியோர் பங்கேற்றனர்.