districts

img

போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

திருவள்ளூர், பிப் 15- போதைப் பழக்கத்திலிருந்து இளை ஞர்கள் விடுவிக்கும் வகையில்  புதனன்று (பிப் 15) திருவள்ளுர் மாவட்டத்தில்  பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகில் வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  மீஞ்சூர், பொன்னேரி, சோழவரம், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திரு வள்ளூர், பூந்தமல்லி, திருத்தணி, ஆர்.கே.பேட்டை உள்ளிட்டு திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சுமார் 4 லட்சம் கையெழுத்துக்களை பெறும் இயக்கத்தை பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.ராம மூர்த்தி துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் ஆர்.சுரேஷ்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.மதன், துணை நிர்வாகிகள் ஜெகன், தினேஷ், பிரகாஷ், நாகராஜ், வெங்கட், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆ.டிக்சன், சிஐடியு நிர்வாகி எஸ்.எம்.அனிப், சிபிஎம் பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். அன்று மாலையில் நடைபெற்ற கருத்தரங்கில் வாலிபர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.