திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் சசிகாந்த் செந்தில் எம்பி ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில், பட்டாபிராம் ஆகிய பகுதிகளில் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர், ஆவடி மேயர் உதயகுமார் துணை மேயர் சூரியகுமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன் தொகுதிச் செயலாளர் அ.ஜான், யுவராஜ் (காங்கிரஸ்), அந்திரிதாஸ் (மதிமுக), மயில் வாகனம் (சிபிஐ), ஆதவன் (விசிகே), முன்னாள் நகரமன்ற தலைவர் விக்டரி மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.