திருவள்ளூர், ஜூலை 16- விண்ணப்பித்த அனைவருக்கும் உதவித்தொகை வழங்க என வலி யுறுத்தி மாற்றுத்திறனாளிகளை ஆட்சி யரிடம் ஒப்படைக்கும் போராட்டம் திரு வள்ளூர் ஆட்சியர் அலுவலக வளா கத்தில் செவ்வாயன்று (ஜூலை 16) அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (ஜூலை 16) மாற்றுத்திறனாளிகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.கீதா தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஆர்.தமிழ்அரசு, மாவட்ட நிர்வாகி கள் பி.நடேசன், தேவா, கங்காதரன், முனிவேல், மாரியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.