districts

img

திருத்தணி அருகே கார் விபத்தில் 5 மாணவர்கள் பலி

திருவள்ளூர்,ஆக.12-
திருத்தணி அருகே உள்ள ராமஞ்சேரி என்ற இடத்தில் கார் மீது கண்டெய்னர் லாரி  மோதியதில் 5 மாணவர்கள் பலியாகினர்.

ஆந்திர மாநிலம், ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர்கள் சைதன்யா ( வயது 21) விஷ்ணு ( வயது 21), வர்மா, ராம்கோமன், சேத்தன், யுகேஷ், நித்திஷ் ஆகியோர் சென்னை காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் பயின்று வந்தனர்.

ஞாயிறன்று  5 மாணவர்கள் காரில் சித்தூர்  மாவட்டம், காணிப்பாக்கம் விநாயகர் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது திருத்தணி அருகே உள்ள ராமஞ்சேரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் மீது  கண்டெய்னர் லாரி மோதியது.

இந்த விபத்தில், மாணவர்கள் சென்ற கார் சுக்குநூறாக நொறுங்கியது. காரில் பயணம் செய்த சேத்தன், யுகேஷ், நித்திஷ், வர்மா, ராம்கோமன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சைதன்யா, விஷ்ணு ஆகிய இருவரும் திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் விபத்து நடந்த பகுதியை  பார்வையிட்டு வாகனத்தில் சிக்கிய இளைஞர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தார். இந்த விபத்து குறித்து கனகம்மா சத்திரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.