districts

img

கே.ஜி. கண்டிகையில் மகளிர் தின கருத்தரங்கம்

திருவள்ளூர், மார்ச் 22- திருத்தணி அருகே கேஜி கண்டிகையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில்  கருத்தரங்கம் நடை பெற்றது. திருத்தணி ஒன்றிய அமைப்பாளர் அம்மு தலைமை தாங்கினார். தீபா வரவேற்றார். மாதர் சங்க மாநில துணைத் தலைவர் சங்கரி, மாவட்டத் தலைவர் இ.மோகனா, ஆசிரியர் சங்க மாநிலச் செயலாளர் பிரசன்னா ஆகியோர் பேசி னர். தமுஎகச மாவட்ட  செயலாளர் கி.பாரி,  விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சி.பெருமாள், சிறுபான்மை  மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் அப்சல்  அகமது ஆகியோர் வாழ்த்திப் பேசினர். குமாரி நன்றி கூறினார்.