திருவள்ளூர், ஜூன் 21- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் குமாரின் மகள் கீர்த்தனா தமிழ்நாடு தேர்வா ணையம் நடத்திய ஏ பிரிவு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று ஏசிஎப் (உதவி வன பாதுகாவலர்)ஆக தேர்வாகி யுள்ளார்.
அவருக்கு சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் விஜுகிருஷ் ணன் சால்வை அணிவித்தார் அப்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பிபாராட்டுகளை தெரி வித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் ஜூன் 18,19 ஆகிய இரண்டு நாட்கள் திரு வள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி யில் நடைபெற்றது. இதில் வனத்துறை பாது காவலராக தேர்வு செய்ய ப்பட்டதற்கு சங்கத்தின் சார்பில் பாராட்டுகளை தெரி வித்தனர். இதில் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்மு கம், மாநில பொதுச் செய லாளர் சாமி நடராஜன், பொரு ளாளர் கே.பி.பெருமாள், மாநில நிர்வாகிகள் டி.ரவீந்தி ரன், பி.டில்லிபாபு, எஸ்.துரை ராஜ் மற்றும் கீர்த்தனாவின் தந்தை குமார் ஆகியோர் மேடையில் உள்ளனர்.