districts

img

விவசாயிகளின் கடும் எதிர்ப்பால் 6 வழி சாலை பணி தற்காலிகமாக நிறுத்தம்

திருவள்ளூர், ஜூன் 15- பொன்னேரி அருகே உள்ள தச்சூர் முதல்   சித்தூர் வரையில் சுமார் 128 கி.மீ   தூரத்துக்கு ஆறு வழிச்சாலை அமைக்கும்  பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பால் தற்காலிகமாக பணி நிறுத்தம் செய்யப்பட் டுள்ளது. எல்லாபுரம் ஒன்றியம்,ஆலப்பாக்கம் ஊராட்சிக்கும், வடமதுரை ஊராட்சிக் கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள  விளைநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகள் செவ்வாயன்று  (ஜூன் 14) காலை பொக்லைன் எந்திரம் மூலம் விவசாய நிலத்தை சமன் படுத்தும் பணியை மேற்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜி.சம்பத், மாவட்டச் செயலாளர்  பி.துளசிநாராயணன், நஞ்சை  நில விவசாயிகள் சங்க தலைவர் ஜெயக் குமார், செயலாளர் சசிகுமார், பொருளாளர் குணசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் விவ சாய நிலத்தை சமப்படுத்தும் பணி நடை பெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு அதிரடி யாக வந்தனர். பின்னர், பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டு  தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும்,விவசாய நிலங்கள் பாதிக்காத வண்ணம் மாற்றுப்பாதையில் சாலை அமைக்க வேண்டும்,பணி ஆணை யில் உள்ள விவரங்கள் அடங்கிய பட்டியலை  காண்பிக்க வேண்டும்,நிலம் கையகப்படுத்த 80 விழுக்காடு விவசாயிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் போன்ற கோரிக்கையை வலி யுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் சமைத்து சாப்பிட்டு இங்கேயே உறங்கி போராட்டத்தைத் தொடர்வோம் என்று கூறினர். இதனையடுத்து தற்காலி கமாக பணியை நிறுத்துவதாக வட்டாட்சியர் ஹரி கிருஷ்ணன் கூறினார். மேலும்,ஆறு வழிச்சாலை சம்பந்தமாக சமாதான கூட்டம் நடத்தப்பட்டு அதில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் பணி துவங்கும் என்றும் உறுதியளித்தார்.இதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.