districts

img

விதொச போராட்டத்தால் திருநிலை ஊராட்சியில் நூறு நாள் வேலை

திருவள்ளூர், ஜூலை 18- எல்லாபுரம் ஒன்றியம், திருநிலை ஊராட்சி,  அண்ணாநகரில் கடந்த 4 மாதங்களாக நூறு நாள் வேலை வழங்கவில்லை.  

வேலை வழங்க வேண்டும் என கேட்ட  மக்களிடம் ஊத்துக் கோட்டை வட்டாட்சியரிடம் எந்த இடத்தில் வேலை செவ் வது என கேட்டு வாருங்கள் என எல்லாபுரம் பிடிஒ அலைகழித்துள்ளார். இந்த நிலையில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் வியாழனன்று (ஜூலை 18), பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து கொண்டு எல்லாபுரம் பிடிஒ  அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து திருநிலை ஊராட்சியில் அண்ணாநகர் மக்களுக்கு வியாழனன்று நூறு நாள் வேலை வழங்கப் பட்டது. இதில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் என்.கங்காதரன், ஒன்றிய செயலாளர் பி.அருள், பொருளாளர் அருணகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.