திருவள்ளூர், ஜன 17- திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகில் உள்ள சின்ன க்காவனம் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் மகன், ரத்தின பிர பாகர் (வயது 27) பட்டதாரி மாணவர். இவர் கடந்த ஆறு வருடங்க ளாக வங்கி தேர்வு 60 முறை எழுதி யுள்ளார். மற்றும் இதர துறை களுக்கான தேர்வுகளில் 44 முறை தேர்வு எழுதி, தோல்வியடைந்துள்ளார். தேர்வில் பலமுறை தோல்வி அடைந்தாலும் விடா முயற்சியுடன் தனது லட்சியத்தை அடைய, 105 வது முறையாக ரத்தின பிரபாகர் சென்னை யில் வங்கி பணிக்காக தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது காஞ்சி புரம் மானாம்பதியில் இந்தியன் வங்கியில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பொன்னேரி அருகில் உள்ள சின்னக்காவனம் கிராமத்தில் பொங்கலன்று கிராம சீரமைப்பு சங்கம் சார்பில் 39 வது ஆண்டு பொங்கல் விளை யாட்டு விழா நடைபெற்றது.அதில் கிராம சீரமைப்பு சங்கத்தின் சார்பில் பாராட்டு தெரிவித்துள் ளனர். மருத்துவ மாணவர்கள், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாண வர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த குழந்தைகளையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.