districts

img

போராடும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க சிபிஎம் வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜூலை 16- தொழில் அமைதிகாத்திட தொழி லாளர்கள் கோரிக்கைகளை அரசு நிறை வேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சிபிஎம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் அறிக்கை வருமாறு,

பொன்னேரி அருகே இருளிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள சூப்பர் பில் யூனிட்டில் அபாயகரமான வேதி பொருட்களை வைத்து மீன்பிடிப்பதற்கான வலைகள் தயாரிப்பதற்கான இழை கள் தயாரிக்கப்படுகிறது. இத்தொழிற்சாலை யில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனை வரும்   சுற்று வட்டாரத்தில் இருந்து வரு கிறார்கள்.

தொழிலாளர்களுக்கு கடுமையான பணிச்சுமை உள்ளது. குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என்பதால் தொழி லாளர்கள் சிஐடியு சங்கத்தில் இணைந்தனர். சங்கத்தில் சேர்ந்த ஒரே காரணத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்குடன் தொழிலாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்து நிர்வாகம் அடாவடியாக செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துகளை முறையாக பதிவு செய்வதில்லை. பெண் தொழிலாளர்கள் 8 மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்கிறார்கள்.

இந்த நிலையில் ஜூலை 8 முதல் தொழி லாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களாக போராடி வரும் தொழிலாளர்களின் கோரிக்கை களை நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்த வேண்டுமென  கோபால் வலியுறுத்தியுள்ளார்.