districts

தீபாவளி சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி

திருவள்ளூர்.அக்.3- வெங்கல் அடுத்த  மாலந்தூர் தாமரைப்பாக் கத்தில் ஏஜென்சி நிறுவனம் மூலம் தீபாவளி சீட்டு நடத்திய ஜே.பி.ஜோதி என்பவர் கோடிக்கணக்கில் மோடி செய்துள்ளார். மாதம் ரூ.1000 செலுத்தி னால் சீட்டு முடியும்போது 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாண யத்துடன் பட்டாசு, வெள்ளி  பாத்திரங்கள் மளிகை  பொருட்கள் வழங்குவதாக வும், மாதம் 500 செலுத்தி னால் 2 கிராம் தங்கத்துடன் மளிகை பொருட்களும் வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இதனால் தாமரை பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளியூர், வெங்கல், செம்பேடு, சேத் துப்பாக்கம், பூவளம்பேடு மற்றும் குறுவாயில் உட்பட  பல கிராமங்களை சேர்ந்த வர்கள் ஏராளமானோர் தீபாவளி சீட்டுக்கு பணம்  கட்டி வந்தனர். இதற் கிடையே ஜோதி  தனது  நிறுவனத்தை மூடிவிட்டு  திடீரென தலைமறை வானார். அவரது செல் போனிலும் பணம் கட்டிய வர்களால் தொடர்பு கொள்ள  முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தீபாவளி சீட்டுக்கு பணம் கொடுத்து ஏமாந்த கிராமமக்கள் ஏராளமானோர் திங்களன்று காலை தாமரை பாக்கம் கூட்டுச்சாலையில் அமர்ந்து மறியலில்  ஈடுபட்டனர். தகவல் அறிந்த தும் வெங்கல் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த னர். இதையடுத்து பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.