districts

img

திருவள்ளூர் மாவட்டத்தில் 5 வார்டுகளில் சிபிஎம் போட்டி

திருவள்ளூர், பிப். 2- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  திருவள்ளூர் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் கட்சி களுடன்  திமுக பேச்சு நடத்தி யது, திருவள்ளூரில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் பூபதி, சட்ட மன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், நகரச் செய லாளர் ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் எஸ்.கோபால், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சம்பத், ஆர்.தமிழ் அரசு ஆகியோர் கலந்து கொண்டனர், கும்மிடிப் பூண்டியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திமுக  கிழக்கு மாவட்டச் செயலா ளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, ஒன்றிய நிர்வாகி ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துளசி நாராயணன், டி.பன்னீர்செல்வம் ஆகி யோர் கலந்து கொண்டனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்திற்குட்ட பகுதிக ளில் முதற்கட்டமாக மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட் டுள்ளன. அதன்படி திருவள்ளூர் நகராட்சி வார்டு 4இல் எம்.உதயநிலா, திருநின்றவூர் நகராட்சி வார்டு 16இல் எஸ்.சரிதா, பொன்னேரி நகராட்சி வார்டு 27இல் எஸ்.குணசேகரன், மீஞ்சூர் பேரூராட்சி வார்டு 18இல் என்.ரமேஷ்குமார், ஆரணி பேரூராட்சி வார்டு 1இல் டி.பச்சையம்மாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, திருத்தணி நகராட்சி ஆகியவற்றில் வார்டுகள் ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.