districts

img

பாதுகாக்கப்பட்ட குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர், ஜூலை 21- திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகில் உள்ள வாயலூர் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு நிலத்தடி நீர் உப்பு   மாறியுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் பணம் கொடுத்து கேனில் அடைக்கப்பட்ட குடிநீரை வாங்க வேண்டிய நிலை உள்ளது.  சிலர் உப்பு நீரையே பருகுவதால்  பல்  வேறு நோய்களுக்கு ஆளாகி உள்ளனர்.  பாதுகாக் கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள்  தொடர்ந்து போராடி  வருகின்றனர். ஆனால்  இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் ஊராட்சியில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும், பழு தடைந்துள்ள மின் கம்பங் களை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொது மக்கள்  வியாழனன்று (ஜூலை 21) வாயலூர் ஊராட்சி மன்ற அலுவ லகத்தை முற்றுகையிட்ட னர். இதனை தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர்  நிதி நிலைமை சீரானதும் கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என உறுதிய ளித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட் டத்திற்கு  சங்கத்தின் ஒன்றிய தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.  மாநில செயலாளர் பி.துளசிநாராயணன்,  மாவட்ட துணைத் தலைவர் பி.கதிர்வேலு, ஒன்றிய நிர்வாகி என்.ரமேஷ்குமார்,  மாதர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் க.புவனேஷ்வரி உட்பட நூற்றுக்கும் மேற் பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.