திருவள்ளூர், டிச. 26- பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்ககோரி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் ஊத்துக்கோட்டையில் திங்களன்று (டிச.26) முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. திருவள்ளுர் மாவட்டம், ஊத்துக் கோட்டை அருகில் உள்ள தாராட்சி கிராமத்தில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இங்கு ஆழ்துளை கிணறு சுடுகாடு அருகில் அமைந்துள்ளது. இதனால் சுடுகாட்டில் அடக்கம் செய்யப் பட்டுள்ள பிணங்களின் அழுகிய நீர், மேல் ஊற்றுடன் கலந்து, ஆழ்துளை கிணற்றில் இறங்கி குடிநீர் சேரும் சகதியுமாக துர்நாற்றத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சுகாதாரமற்ற நீரை பருகுவதால் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளா கின்றனர். ஆகவே சுடுகாடு அருகில் உள்ள ஆழ்துளை கிணறு உடனே அகற்ற வேண்டும், புதிய குழாய் அமைத்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையில் தாராட்சி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்று கையிட்டனர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்க ளுடன் மக்கள் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த ஒரு வாரத்தில் புதிய ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநி யோகம் செய்யப்படும் எனவும் புதிய பைப் லைனிங் அமைத்து கொடுக்கப்படும் எனவும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின், ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி செந்தில்வேல் ஆகி யோர் உறுதியளித்தனர். கிளை செயலாளர் எம்.திருப்பதி தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் கட்சியின் வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் என்.கங்காதரன், ஏ.பத்மா, வட்ட குழு உறுப்பினர்கள் இ.வேலன், பி.அருள், பெண்கள் கிளை செயலாளர் மஞ்சுளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.