திருவள்ளூர், அக். 7- ஆரணி அரசினர் பெண் கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் அத்திக்குளம் பகுதியில் அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகி றது. இப்பள்ளியில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவர் கள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படித்து வருகின்றனர். இப்பள்ளி 1985-86 ஆம் ஆண்டு துவங்க ஆரணி பேரூராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் இப்பகுதி யில் இருந்த “நக்கலா குண்டா” என்ற பகுதியை யும்- ஸ்ரீசத்ய சாயி டிரஸ்ட் சார்பாகவும் நிலத்தை தானமாக கொடுத்தனர். இதனால்,பெண்கள் பள்ளி இப்பகுதியில் கல்வித்துறை சார்பில் துவக்கி வைத்த னர். இந்நிலையில், இப் பள்ளிக்கு என்று உள்ள இடத் திற்கு முழுமையாக சுற்று சுவர் கட்டி முடிக்கவில்லை.மேலும், இப்பள்ளி வளாகத் தில் உள்ள மேடு-பள்ளங் களை சீரமைக்கவில்லை. இதனால் இப்பள்ளி வளா கத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ரூ.7லட்சம் மதிப்பில் கழி வறை கட்டும் இடத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் அதனை அகற்ற மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறை யும் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். பள்ளிக்கு சுற்றுச் சுவர் அமைத்து பள்ளி இடத்தை யாரும் ஆக்கிர மிப்பு செய்யாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.