districts

img

அறிவியல் இயக்க மாநாட்டில் 20 ஆய்வு கட்டுரைகள் தேர்வு

திருவள்ளூர், நவ 26- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவள்ளூர் மாவட்டம் ஒருங்கிணைந்த 30 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு சனிக்கிழமையன்று (நவ.26)  திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் நடை பெற்றது. மாநாட்டின் கருப்பொருளாக “ஆரோக்கி யம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுச் சூழலைப் புரிந்து கொள்வது” என்ற தலைப்பில் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட னர். மாவட்டம் முழுவதும்  சுமார் 52  அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 190 ஆய்வுகள் சமர்பிக்கப்பட்டது. இதில் சுமார் 400 மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் ஆய்வுகளை பார்வையிட்ட ஜெயா கல்வி குழுமத்தின் இயக்குநர் பேரா சிரியர் கனகராஜ் மாணவர்கள் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மாவட்ட மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுகளில், 20 ஆய்வுகள் சிறந்த ஆய்வுகள் என தேர்ந்தெடுக்கப்பட்டு  மாநில மாநாட்டிற்கு அனுப்பபடுகிறது. சிறப்பு  அழைப்பாளராக மருத்துவர் அனுரத்னா, தாசர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எபிநேசர் பாக்கியம் கனவு நிறுவனர் நந்தகுமார், அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாந்தகுமாரி, எத்துராசன், தாளமுத்து நடராசன்,சண்முக சுந்தரம்,  தேவராஜ், ஆகியோர் பங்கேற்று  மாண வர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.மோசஸ்பிரபு  தலைமை தாங்கி னார்.முன்னதாக ஆசிரியர்.எஸ்.குமார் வரவேற்றார். பூந்தமல்லி ஒன்றிய செயலாளர்  கமலேஷ் நன்றினார்.