districts

img

ஆபத்தான முறையில் தாழ்வாக தொங்குகிற மின் கம்பி

திருவள்ளூர் அருகே உள்ள திருவூர் ஊராட்சி குமரன் நகரில் மின் கம்பி மிகவும் தாழ்வாக தொங்குகிறது. ஆபத்தான முறையில் இருப்பதை சரிசெய்ய வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாத போக்கு உள்ளது. விபத்துகள் நடப்பதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.