திருவண்ணாமலை,ஜூலை 12- திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் கிராமத்தில் பிறந்து வளர்ந்து நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற எழுத்தாளர் ப. ஜீவகாருண்யன் பல்வேறு நூல்களை வெளியிட்டு இருமுறை தமிழக அரசின் விருது பெற்றவர். இவரது இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா வெம்பாக்கம் கிராமத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அ. குமார் தலைமை தாங்கி னார். இணையர் இராஜசேகர் பிரியா வரவேற்றார். “இறுதிப் படியிலிருந்து” எனும் நூலை யும் “111 சிறந்த சிறார் கதைகள்”மொழி பெயர்ப்பு நூலையும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மயிலை பாலு வெளியிட பெரணமல்லூர் சேகரன், ‘பால புரஸ்கார்’ விருது பெற்ற கவிஞர் மு. முருகேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். செய்யாறு சோலை பழநி, வட்டாட்சியர் அ. சுபாஷ் சந்தர், ஆவணியாபுரம் வரத ஜெய ராமன், கவிஞர் பல்லவிக் குமார், ஆர். ஜீவா னந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பலராமன், மாவட்டச் செயலாளர் டி.கே. வெங்கடேசன், மாவட்டப் பொருளாளர் உதயக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பணி ஓய்வுக்கு பிறகு வெம்பாக் கத்தில் வசித்து வரும் எழுத்தாளர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ப. ஜீவ காருண்யன் ஏற்புரை நிகழ்த்தினார். இணை யர் கோ. பாஸ்கரன்-கா. செல்வபாரதி நன்றி கூறினார்.