திருவண்ணாமலை, ஜூலை 5- திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் எஸ்.டி. குருமன்ஸ் சாதிச்சான்று வழங்கக் கோரி இரண்டா வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உட்பட பழங்குடி மக்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, செங்கம் ஆகிய வட்டங்க ளில் குருமன்ஸ் பழங்குடி யினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு எஸ்.டி. சாதிச் சான்று வழங்கக் கோரி முதலமைச்சர், அமைச்சர், மாவட்ட ஆட்சி யர் உள்ளிட்டோருக்கு பல முறை கோரிக்கை மனு கொடுத்து தொடர்ந்து போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, குரு மன்ஸ் பழங்குடியினர் குறித்து ஆய்வு நடத்த சென்னை பழங்குடியினர் இயக்குநரகம் சார்பில் குழு ஒன்று அமைக்கப் பட்டது. அந்த குழு திரு வண்ணாமலை மாவட்டத் தில் ஆய்வு நடத்தி அறிக்கை யும் சமர்ப்பித்தது. ஆனாலும் பல ஆண்டுகாலமாக சாதிச் சான்று வழங்கப் படவில்லை. இந்நிலையில், குரு மன்ஸ் கலாச்சார ஆய்வ றிக்கையின்படி எஸ்.டி. சாதிச்சான்று வழங்கக் கோரி தண்டராம்பட்டு, செங்கம் தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்பட 500 க்கும் மேற்பட்ட பழங்குடியினர்கள் தங்களது கோரிக்கைகள் வலி யுறுத்திய பதாகைகளுடன் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை (ஜூலை 4) உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எஸ்.ராமதாஸ், இரா.பாரி, நகரச் செயலாளர் எம். பிரகலநாதன், தண்ட ராம்பட்டு தாலுக்கா செய லாளர் அண்ணாமலை, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எஸ்.குமரன், லூர்துமேரி, நகர குழு உறுப்பினர் பழனி உள்ளிட்டோர் உரையாற்றி னர். 2 ஆவது நாளாக செவ்வாயன்றும் (ஜூலை 5) போராட்டம் தொடர்ந்ததால் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்க ளிலிருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர். மறு புறத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட குருமன்ஸ் பழங்குடியின மக்களோடு பேச்சு நடத்தினர். அதில் சமரச தீர்வு ஏற்படவில்லை. இதை யடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்த னர்.