திருவண்ணாமலை, டிச. 1- வந்தவாசி அடுத்த சலுக்கை, பாதிரி உள்ளிட்ட கிரமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கக் கோரி மனு அளித்த னர். திருவண்ணாமலை மாவட் டம, வந்தவாசி அடுத்த பாதிரி, சலுக்கை உள்ளிட்ட பகுதி களில் பழங்குடி மக்கள் பரவலாக வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் கடந்த மாதம் வாக்காளர் முகாம் நடத்தப் பட்டது. அதில் பழங்கடி மக்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினர். வாக்காளர் அட்டை இல்லாததால், தங்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படு வதாகவும், ஆதார் அட்டை எடுக்கமுடியவில்லை, மின் இணைப்புடன் ஆதார் இணைக்க முடியவில்லை, அரசு சலுகைகளும் கிடைக்கவில்லை என்றனர். எனவே தங்களுக்கு வாக்கா ளர் அட்டை வழங்க வேண்டும் என சட்டையில் தேசியக்கொடி அணிந்து வந்து வந்தவாசி வட்டாட்சியரிடம் மனு அளித்த னர். மனுக்கனைள பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் முரு கானந்தம், வாக்காளர் அட்டை வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டாரச் செய லாளர் அப்துல் காதர், மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாரி முத்து, மாவட்டக் குழு உறுப்பி னர் வடிவேலு, சிபிஎம் கிளைச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.