திருவண்ணாமலை தென் ஒத்தவாடை தெருவில் வளையல், குங்குமம் போன்ற பொருட்களை தள்ளுவண்டியில் வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் திங்களன்று (நவ. 28) ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் அங்கு வந்த நகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றாமல் வியாபாரம் செய்து வந்த வாகனத்தை பொருட்களுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் நொறுக்கியுள்ளனர். இதைக் கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.