districts

img

மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்: கூடுதல் கட்டடம் கட்ட கிராம மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை,டிச.22- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், முக்குரும்பை ஊராட்சிக்குட்பட்ட பாலாம்பாக்கம் கிரா மத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்ததால், அப்புறப் படுத்தும் திட்டத்தில் கடந்த ஆண்டு இரு வகுப்பறை கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. இதனால், தற்போது மாணவர்கள் ஒரே வகுப்ப றையிலும் மரத்தடியிலும் பயின்று வருகின்றனர். மழையால் மாண வர்கள் மிகுந்த சிர மத்திற்குள்ளாகின்றனர். இதனால், கிராம மாணவர்க ளின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை இந்த கல்வி யாண்டிலேயே கட்டித்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.