திருவண்ணாமலை, மார்ச் 31- திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தென்முடியனூர் கிராமத்தில் 2023 ஜனவரி 30ஆம் தேதி தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை மீட்க ஜனநாயக இயக்கங்கள் எடுத்த முயற்சியை, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க சக்திகளால், பல்வேறு வடிவங்களில் சாதிய வன்கொடுமைகள் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இந்நிலையில் வன்கொடுமை நடத்திடும் சாதி ஆதிக்க சக்திகள் மீது மாவட்ட நிர்வாகம் பாரபட்சம் இல்லாமல் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தண்டராம்பட்டு அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தாலுகா செயலாளர் இரா.அண்ணாமலை தலைமை தாங்கினார். அம்பேத்கர் சமூக எழுச்சி படை நிர்வாகி இந்திரா வரவேற்றார். கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ், மாநில துணைப் பொதுச் செயலாளர் ப.செலாவன், விசிக வழக்கறிஞர் அணி மாநில பொதுச் செயலா ளர் பார்வேந்தன், மாவட்டச் செயலாளர் அம்பேத்வளவன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் வழக்கறிஞர் குமார் ஆகியோர் பேசினர். தென் முடியனுர் அறநிலைத்துறைக்கு சொந்தமான முத்து மாரியம்மன் ஆலயத்தை மூடி தலித் மக்கள் வழிபாட்டிற்கு தடை ஏற் படுத்தும் ஆதிக்க சாதியினர் மீது நடவ டிக்கை எடுத்து தலித் மக்கள் உரிமையை மீட்க வேண்டும், சமூகப் புறக்கணிப்பு மற்றும் வன்கொடுமைகளை திட்டமிட்டு உருவாக் கும் சாதிய ஆதிக்க சக்திகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜெய் பீம் நகரில் இந்திரா என்பவர் கடையை தீவைத்து எரித்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், பேராசிரியர் முருகனுக்கு நேரடி யாக கொலை மிரட்டல் விடுத்த நேருவை கைது செய்ய வேண்டும், தண்டராம்பட்டு பகுதியில் தொடரும் சாதிய வன்கொடுமை களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.