திருவண்ணாமலை, ஏப். 7- திருவண்ணாமலை மாவட் டம், வந்தவாசி வட்டம், கீழ்ந மண்டி கிராமத்தில் முதற்கட்டமாக ரூ.30 லட்சத்தில் தொல்லியல் அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, கீழ்ந மண்டி கிராமத்தில் நடைபெறும் தொல்லியல் அகழாய்வுப் பணி துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், அகழ்வாராய்ச்சி இயக்குநர் விக்டர் ஞானராஜ், ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். தமிழ்நாடு தொல்லியியல் துறையின் மூலம் சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த இடத்தில் 200க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல் வட்டங்கள் உள்ளன. சில சேதமடைந்த கல் வட்டகளினுள் ஈமப்பேழையின் எச்சங்கள் காணப்படுகின்றன. இங்கே அமைந்துள்ள கல் வட்டங்கள் 3 முதல் 5 மீட்டர் விட்டம் கொண்டதாக உள்ளன. கல் வட்டங்களைத் தவிர, இந்த தளத்தில் குத்துக்கல், கப் அடையாளங்கள் மற்றும் மெரு கூட்ட பயன்படுத்தப்பட்ட பள்ளங் களும் காணப்படு கின்றன. இரும்பு காலத்தை சார்ந்த மட்பாண்டங்களான கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மற்றும் மெருகூட்டப்பட்ட சிவப்பு பானை ஒடுகள் ஆய்வில் அதிக ளவில் காணப்படுகின்றன. மெரு கூட்டப்பட்ட சிவப்பு பானை ஓடு கள் மற்றும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் இரண்டிலும் குறி யீட்டு அடையாளங்கள் உள்ளன. ஈமப்பேழையின் துண்டு களும் மேற்பரப்பு ஆய்வில் கண்டெடுக்கப்பட்டன. சேத மடைந்த நிலையில் காணப்படும் கல் வட்டத்திலிருந்து இரும்புக்கசடுகள் மற்றும் இரும்புக் கருவிகளும் கண்டு பிடிக்கப்பட்டன. சிறிய இரு முக கற்கருவி, புதிய கற்கால செல்ட்ஸ் போன்ற கற்கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பகுதி யில் பெருங்கற்கால எச்சங்கள் மற்றும் இரும்புக்கால குடி யேற்றங்கள் குறித்த ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன.
இந்த அகழாய்வு இந்த பகுதி யிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புதிய வர லாற்றுக்கு முந்தைய மற்றும் இரும்புக்கால தளங்களைக் கண்டறிய வழிவகுக்கும். மேலும் இந்த பகுதியின் பண்பாட்டுக் காலவரிசையையும், புதிய கற்காலத்திலிருந்து இரும்புக் காலக்கட்டத்திற்கு மாறிய பண்பாட்டு மாற்றத்தையும் புரிந்து கொள்ள உதவும். தற்போது நடைபெற உள்ள அகழ்வாராய்ச்சியில் இப்பகுதி யில் இரும்பு உருக்கும் தொழில் நுட்பம் மற்றும் இரும்புக்கால மக்களின் ஈமபழக்க நடைமுறை களை மதிப்பிடுதல், இவ்விடத் தின் தள உருவாக்கத்தை பகுப்பாய்வு செய்தல், இப்பகுதி யில் உள்ள பிற பெருங்கற்கால இடங்களை சரியான தொல்லியல் சூழலில் அடிப்படையில் அடை யாளம் காணுதல், தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் பண்டைய பண்பாட்டு எச்சங் களை ஆவணப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற் கொள்ளப்படும்.