districts

img

பரிதவிக்கும் பழங்குடி மக்கள் பட்டா கேட்டு சிபிஎம் நடைபயணம்

திருவண்ணாமலை,டிச. 13- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ளது கீழ்கொவளைவேடு கிராமம். இங்கு கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக பழங்குடி காட்டுநாயக்கன் இன மக்கள் வசித்து வருகின்றனர்.  நீர்நிலைப் பகுதியில் குடி யிருக்கும் தங்களுக்கு குடிமனை பட்டா கேட்டு, கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைமையில் மனு அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இது வரை வீட்டுமனை பட்டா வழங்கப்பட வில்லை. எனவே உடனடியாக குடிமனை பட்டா வழங்கக் கோரி, கீழ்கொ வளைவேடு கிராமத்தில் இருந்து வந்தவாசி வட்டாட்சியர் அலு வலகம் வரை, 8 கிலோ மீட்டர் செவ்வாயன்று (டிச. 13) நடைப்பயணமாக சென்ற னர். பின்னர் வட்டாட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளைச் செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்ற நடைபயணத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன், காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எ.அய்யனார், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் முரளி, மாரி முத்து, வட்டாரச் செயலாளர் அ.அப்துல் காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.