திருவண்ணாமலை , நவ.22- திருவண்ணாமலை தீப விழா வையொட்டி மலையேறும் நபர் களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதி க்கப்பட்டுள்ளன.
வருகிற 26 ஆம் தேதி காலை 5 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணா நிதி அரசுக் கலை கல்லூரி வளா கத்தில் சிறப்பு மையம் திறக்கப் பட்டு முதலில் வரும் 2,500 நபர்க ளுக்கு முன்னுரிமை என்ற அடிப் படையில் புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும். குறைந்த பட்சம் 18 வயது நிறைவடைந்தவர்கள் முதல் அதிகபட்சம் 60 வயது உள்ள வர்கள் மட்டுமே மலை ஏற அனு மதிக்கப்படுவார்கள்.
மலை ஏற அனுமதி கோரும் நபர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அரசு அடையாள ஆவண ங்களில் ஏதேனும் ஒன்றின் நகல் மற்றும் மருத்துவ அலுவலரிடம் உடல் தகுதி சான்று பெற்றுக் கொள்ள வேண்டும்.
கோயில் கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது. மலை ஏறும் நபர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், காலி தண்ணீர் பாட்டில் களை மலையிலிருந்து இறங்கி வரும்போது திரும்ப கொண்டு வர வேண்டும். மலை ஏறும் நபர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி யில்லை.
திருவண்ணாமலை அருணா சலேஸ்வரர் கோவிலில் தீப விழா கொடியேற்றம் கடந்த 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதி காலை தொடங்கியது. நவ. 26 ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.