districts

img

தமுஎகச நிர்வாகிக்கு புகழஞ்சலி

திருவண்ணாமலை, அக்.25- போளூரில் மறைந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முதல் கிளைச் செயலாளர் ராமஜெயம் புகழஞ்சலி கூட்டம்  கிளைத் தலைவர் ம. வீரமுத்து  தலைமையில் நடை பெற்றது. நிர்வாகிகள் மஞ்சுளா ப. கிருஷ்ண மூர்த்தி,  இரா. சிவாஜி, இரா. இரவிதாசன், கி.பாலமுருகன், ஆசிரியர் பாஸ்கரன், (தமு எகச) அ. உதயகுமார் (விவசாயிகள் சங்கம்), செயலாளர் ப. செல்வன்(தீஒமு), மு. பாலாஜி, அ.செந்தில் குமார், இரவி ராஜ்  போளூர் குரல் ஆசிரியர் சுரேஷ் குமார், இராமb ஜயத்தின் துணைவியார், மகள் மற்றும் உறவினர்கள் கலந்துக் கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய இராம ஜெயத்தின் துணைவியார்,“ தானும் தனது மகளும் தமுஎகச வில் இணைந்து பணி யாற்றுவோம்”என்றனர்.