திருவண்ணாமலை, ஜூன் 26- திருவண்ணாமலை மாவட்டத்தில் வீரளூர், பாடகம், மல்லவாடி உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஊழல், முறைகேடு குறித்து பல ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட கூட்டுறவு நிர்வாகத்தை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப் பட்டது. திருவண்ணாமலை கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர் டி. ரவீந்திரன் கண்டன உரையாற்றினார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி. கே. வெங்கடேசன், சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவக் குமார், வழக்கறிஞர் அபிராமன், தையல் சங்க மாவட்ட அமைப்பாளர் எம். வீரபத்தி ரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ப.செல்வன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ். அருண்குமார், மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமணன், விதொச மாவட்ட செயலாளர் கே.கே.வெங்கடேசன், துணை தலைவர் ஜி.பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பி.சுந்தர், எஸ். ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.