districts

img

அரசு ஊழியர் சங்க தலைவர் படத்திறப்பு-நினைவேந்தல் கூட்டம்

திருவண்ணாமலை, ஜன. 19- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் தலைவர் அ.அருண்பாட்சா, உடல் நலக் குறைவால் காலமானார். இதை யொட்டி, அவரது பட திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்  திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள நில அளவை அலுவலர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.  ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். அ. அருண் பாட்சா அவர்களின் படத்தை திறந்து வைத்து,ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி உரையாற்றி னார். மாநில நிர்வாகிகள் செந்தமிழ்ச் செல்வன், சி. சுப்பிர மணியன், பாஸ்கர், டானியல் ஜெய்சங்கர், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் சு. பார்த்திபன், பா.கிருஷ்ணமூர்த்தி, சந்திர சேகரன், சிஐடியு நிர்வாகி எம்.வீரபத்திரன், தமுஎகச நிர்வாகி பரிதிமாற் கலைஞன், அரசு ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகி சந்துரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.