திருவண்ணாமலை,ஜூன் 22- பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் திருவண்ணாமலை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. மாவட்ட துணைச் செயலாளர் கா.யாசர் அராபத் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் இலியாஸ் சர்க்கார் சேக்.ஷபியுல்லா, இஸ்மாயில் சரிப்,சர்த்தார் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் அப்துல் காதர் அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த மாநாட்டில் “வகுப்புவாதமும், மதச்சார்பின்மையும்” என்ற தலைப்பில் மாநில பொதுச் செயலாளர் எம்.ராம கிருஷ்ணன் கருத்துரை வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை சிறப்புரையாற்றினார். மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப் வாழ்த்திப் பேசினார். மாவட்ட அமைப்பாளர் மு.வீரபத்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மலைவாழ் மக்கள் சங்க மாநிலச் செயலாளர் சரவணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் நசீர் அகமது, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில நிர்வாகி ப.செல்வன், விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் பிரகல நாதன், சிபிஎம் பெரணமல்லூர் வட்டார செயலாளர் சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறுபான்மை மக்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்த அவர்கள் வசிக்கும் இடத்திற்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மாவட்டத்திலுள்ள இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மற்றும் ஜெயினர் இன மக்களுக்கு டாம்கோ திட்டத்தின் மூலமாக கடனுதவி வழங்க வேண்டும். மாவட்டத்திலுள்ள ஆரம்ப உருது பாட சாலைகளின் கட்டிடங்களை மேம்படுத்த வேண்டும். வந்தவாசியிலுள்ள பாய் நெச வாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். தமிழக அரசால் வழங்கப்பட்ட வந்தவாசி அடுத்த பிருதூரில் உள்ள இஸ்லாமிய குடி யிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
இம் மாநாட்டில் 26 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டத் தலைவராக யாசர் அராபத், செய லாளராக அப்துல்காதர், பொருளாளராக முபாரக், துணைத் தலைவர்களாக நவாப் ஜான்,முகில் தம்மபிரபா, துணைச் செயலாளர்களாக இலியாஸ் சர்க்கார்,ராஜபெருமாள் ஆகியோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.