districts

பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளி கைது

திருவண்ணாமலை,அக்.6- திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்தில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார். இவர் பெரணமல்லூர் வங்கிக்குச் சென்று பணம் எடுத்துக் கொண்டு தனது வீட்டுக்கு பெரணமல்லூர் ஏரி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அது சமயம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வடுவன்குடி சையைச் சேர்ந்த தேவன், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அவ ரிடம் போராடி தன்னை விடு வித்துக்கொண்டு வீடு போய்ச் சேர்ந்துள்ளார் அந்தப் பெண். இந்த  தகவ லறிந்த அந்த பெண்ணின் மகன்கள் தேவனை எச்சரித்துள்ளனர். அதன்பிறகு, தேவன் தனது மகன், மனைவியுடன் வந்து பழங்குடியின பெண்ணையும் குடும்பத்தி னரை யும் கடுமையாக தாக்கியுள்ளனர். அதில் படுகாயமடைந்த ஒரு வர் சேத்துப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரணமல்லூர் ஒன்றியச் செயலாளர் ந. சேகரன், இடைக்குழு உறுப்பினர் இரா. ராஜசேகரன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செய லாளர் மாரிமுத்து ஆகி யோர் துணையுடன் பாதிக்கப்பட்ட பெண்  பெரணமல்லூர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் நந்தினி நடத்திய விசாரணையை தொடர்ந்து தேவன், அவரது மனைவி, மகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தார்.