திருவண்ணாமலை, மார்ச் 31- திண்டிவனம் முதல் நகரி வரை அமைய உள்ள புதிய ரயில்வே பாதைக்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் கோட்டாட்சியர் அலு வலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைச் செயலாளர் பி.பெருமாள், மாவட்ட பொருளாளர் அ.உதயகுமார், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, சிபிஎம் செய்யார் தாலுகா செய லாளர் டி.வெங்கடேசன், விவசாயிகள் சங்கத்தின் வந்தவாசி தாலுக்கா தலைவர் என்.ராதாகிருஷ்ணன், செயலாளர் ஜா.வே.சிவராமன், வெம்பாக்கம் செயலாளர் ஆதிகேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோட்டாட்சியரிடம் மனு அளித்த னர். மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சி யர் இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.