திருவண்ணாமலை, மார்ச் 20- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பாஞ்சரை, வெடால், குண்ண கம்பூண்டி, ஆச்சமங்கலம், இளங்காடு, பொன்னூர் உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிலம், பயிர், மரங்கள், கிணறு, பம்பு செட்டுகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் நூக்காம் பாடி, ஆரணி, போளூர், கலச பாக்கம், வந்தவாசி பாஞ் சரை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, தேசூர்- தெள்ளாறு சாலை பாஞ்சரை யிலுள்ள உயர் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்த அங்கு வந்த சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப் பட்ட நிறுவனத்திடம் பேசி முறையான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனாலும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நடை பெறும் என்று 6 ஆவது நாளாக விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத் தில் ஈடுபட்டனர். சிபிஎம் வட்டச் செயலாளர் அப்தல் காதர், நிர்வாகிகள் வே.சிவ ராமன், தங்கமணி, பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.