திருவண்ணாமலை, ஜூன் 7- நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு பெறுவதை தடுக்க கோரியும், நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு மாதக் கணக்கில் பணம் வழங்காமல் தாமதம் செய்வதை கண்டித்தும் செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சங்கத்தின் வட்டார செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வேல்மாறன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் ப. செல்வன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி .கே. வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் உதயகுமார், மாவட்டப் பொருளாளர் அருண்குமார், சிஐடியு நிர்வாகி வே. சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..