districts

img

சாதிச் சான்று கேட்டு சிபிஎம் போராட்டம்

திருவண்ணாமலை, டிச. 15- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழை-எளிய மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களில், தெருவிளக்கு, கழிவறை, நீர் நிலை பாதுகாப்பு, குடிநீர், பழங்குடியினருக்கான சாதி சான்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக போளூர் அடுத்த கீழ்ப்பட்டு, செங்கம் அடுத்த தண்டராம்பட்டு, போளூர் அடுத்த அத்தி மூர், சந்தவாசல், சீராம்பாளையம் ஆகிய 5 மையங்களில் வியாழனன்று (டிச. 15) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தின் வாயிலாக ஊராட்சி மன்ற நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் கோரிக்கை கள் மீது நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

;