திருவண்ணாமலை, மார்ச் 25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது மாநில மாநாடு விளக்க பொதுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பஜார் வீதியில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் எ.வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பி னர் ச.குமரன் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் ஆகி யோர் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், ப.செல்வன், பிரகலநாதன், ஏ.லட்சுமணன், கே.வாசுகி, என்.சேகரன், எஸ்.ராமதாஸ் மற்றும் மாவட்டக் குழு, இடைக் கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். எஸ்.ரஞ்சித் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், தீக்கதிர், மார்க்சிஸ்ட், செம்மலர், பீப்பிள்ஸ் டெமாக்ரசி சந்தாக்கள் வழங்கப்பட்டது. சந்தாவை மாநிலக் குழு உறு ப்பினர் என்.பாண்டி பெற்றுக் கொண்டார்.