திருவண்ணாமலை, ஜன.1- திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாணாபுரம் கிரா மத்தைச் பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு குடியிருக்க சொந்த வீடு இல்லாததால், கடந்த 2013ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் அவ ருக்கு வீட்டுமனை பட்டா வழங்கியது. அந்த வீட்டு மனையில் தற்போது இலவச வீடு கட்ட அரசு ஆணை வழங்கியுள்ளது. இதையடுத்து, சுப்பிர மணி குடும்பத்தினர் வீடு கட்டுவதற்கான கட்டுமான பணியை சனிக்கிழமை (டிச. 31) தொடங்கியுள்ளனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த நடராஜன் மனைவி மல்லிகா, தனது மகள் மற்றும் அடியாட்களு டன் வந்து, வீடுகட்டும் பணியை தடுத்து நிறுத்தி, ஆபாசமாக பேசி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். வீட்டின் கட்டுமான பொருட்களை சேதப்படுத்தியுனர். மேலும் அந்த இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட காலத்திலிருந்து, சுப்பிர மணி குடும்பத்தினரை வீடு கட்ட விடாமல், ஆதிக்க சாதியினர் பலமுறை தடுத்து வந்துள்ளனர். இந்நிலை யில் பழங்குடியினர் வீடு கட்டுவதை தடுத்து, கட்டு மான பொருட்களை சேதப்படுத்திய, ஆதிக்க சாதியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக் குமார் தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தி னர் ஞாயிறன்று (ஜன. 1) வானாபுரம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட இடத்தை சிவக்குமார் மற்றும் தண்டராம்பட்டு வட்டார செயலாளர் அண்ணாமலை ஆகியோர் பார்வையிட்டனர்.