திருவண்ணாமலை, ஜுன் 23- பட்டு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பட்டு கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்திற்கு எம். வீரபத்திரன் தலைமை தாங்கினார்.
இளங்கோ வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் தலைவர் இ. முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. பாரி, மாவட்ட தலைவர் கே. காங்கேயன், மாவட்ட பொருளாளர் எஸ். முரளி, சிஐ டியு நிர்வாகிகள் சி. அப்பாசாமி, பி. கண்ணன், கே. சிவப்பிரகாசம், சிபிஎம் வட்டார செயலாளர் ரமேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், 1985 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு சட்டமாக்கியுள்ள பட்டு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
கைத்தறி நெசவாளர் நல சட்டத்தை அமல்படுத்த வேண்டும், நெச வாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.5ஆயிரம் வழங்கிட வேண்டும், பட்டு கைத்தறி சேவை களுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் தலை வராக இ .இளங்கோ, பொதுச் செயலாள ராக எம். வீரபத்திரன், பொருளாளராக குமார் உள்ளிட்ட 23 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது.