திருவண்ணாமலை, ஜூன் 14- தையல் கூட்டுறவு சங்கத் தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட தையல் கலை தொழிலாளர் கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.
இதுகுறித்து வந்தவாசி நகர குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. திருவண்ணாமலை தையல் மகளிர் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கத்தில் 1600 உறுப்பினர்களும், வந்தவாசி அன்னை சத்யா தையல் மகளிர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் 1100 உறுப்பினர்களும் உள்ளனர்.
மாவட்ட சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சங்கங்களில், தமிழ்நாடு அரசு வழங்கும் பள்ளி சீருடைகள் தைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக, வந்தவாசி அன்னை சத்யா தையல் கூட்டுறவு சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட வில்லை. புதிய உறுப்பினர் களை சேர்க்க வேண்டுமென, திருவண்ணாமலை மாவட்ட தையல் கலை தொழி லாளர்கள் சங்கம் சார்பில், கடந்த 2021 ஆம் ஆண்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, ஊர்வலம், ஆர்ப் பாட்டம் நடத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஆனால் அந்த கோரிக்கை களை ஏற்காமல், புதிய நபர்களை உறுப்பினர்க ளாக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜூன் 19 அன்று வந்தவாசி அன்னை சத்யா கூட்டுறவு சங்கத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் தையல் சங்கத் தின் மாவட்டக் குழு உறுப்பினர் அப்துல் காதர் தலைமை தாங்கினார், மாவட்டச் செயலாளர் எம். வீரபத்திரன், நகர செயலா ளர் என். ஜீனத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.