districts

img

ஆரணி அருகே 50 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

திருவண்ணாமலை, டிச.10- திருவண்ணாமலை மாவட்டம்,  ஆரணி படவேடு பகுதியில் மாண்டஸ் புயல் சூறாவளி காற்றில் சிக்கி 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வாழை குளைகளுடன் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள ஆரணி அடுத்த படவேடு, காளிகாபுரம், சின்ன புஷ்பகிரி, புஷ்பகிரி, ராம நாதபுரம், ரெட்டைதார், ரெட்டி பாளையம் மற்றும் சந்தவாசல் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட  ஏக்கர் நிலங்களில் வாழை மரங்கள் பயிரிடப் பட்டிருந்தன. இந்நிலையில் புயல் காற்றினால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகி உள்ளது. குறிப்பாக பூவும், பிஞ்சு மாக வாழை குலை பாதி முற்றிய அளவில் விற்கவும் முடியாமல், உபயோகப்படுத்தவும் முடியாமல் இருப்பதால், பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவ சாயிகள் வேதனையுடன் தெரி வித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உரிய கணக்கெடுப்பு நடத்தி நஷ்ட வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.