திருவண்ணாமலை, ஜூலை 4- திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக் கம் வட்டம், காந்தப்பாளை யம் சீனந்தல் ஊராட்சியில் 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை ஒரு நாள் கூலியாக வழங்கப்படுகிறது.
இதனை கண்டித்தும், ஏழை, எளிய, மாற்றுத்திற னாளி, பெண்கள் நலனுக் காக இடதுசாரிகளின் வற் புறுத்தலால் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை முடக்காமல், கூடுதல் நிதி ஒதுக்கி, கேரள மாநிலம் போன்று, விவசாய பணி களுக்கும் இப்பணியை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், காந்தப்பாளையம் சீனந்தல் கிளையின் சார்பில் மாவட்ட தலைவர் டி.கே.வெங்கடேசன் தலை மையில் ஊராட்சி அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
100 நாள் வேலைக்கு சட்ட கூலி 319 ரூபாயை குறைக்கா மல் வழங்க வேண்டும், போலியான நபர்களுக்கு வேலை அட்டை வழங்கு வதை நிறுத்த வேண்டும், என வலியுறுத்தி பெண் தொழிலாளர்கள் முழக்க மிட்டனர்.