திருப்பூர், செப். 5 - திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி யை முன்னிட்டு, மிரட்டி நன்கொடை வசூலில் ஈடுபட்டு வந்த இந்து முன்ன ணியைச் சேர்ந்த கும்பல் ஒன்று, கணபதி என்பவரின் தள்ளுவண்டி உண வகத்தை அடித்து நொறுக்கிச் சூறை யாடியுள்ளது.
திருப்பூர் பி.என்.சாலை போயம் பாளையம் அபிராமி தியேட்டர் ரோடு, கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (52). இவர் அப்பகுதியில் தள்ளுவண்டி உணவகம் நடத்தி வரு கிறார். கடந்த ஆகஸ்ட் 25 அன்று இந்து முன்னணியை சேர்ந்த ராசுக்குட்டி மற்றும் சிலர் விநாயகர் சதுர்த்தி வசூ லுக்கு வந்துள்ளனர். அப்போது கணபதி ரூ. 550 நன்கொடை கொடுத்திருக்கிறார். அந்தத் தொகைக்கு இந்து முன்னணி பெயரில் ரசீது வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், மீண்டும் செவ்வாய் கிழமை (செப். 3) இரவு 10 மணி அளவில் இந்துமுன்னணியைச் சேர்ந்த ராசுக்குட்டி மற்றும் அவருடன் 7 பேர் மது போதையில் கணபதியின் தள்ளு வண்டி கடைக்குச் சென்று விநாயகர் சிலை வைக்க கூடுதல் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர் ரூ. 3 ஆயிரம் நன்கொடை கொடுக்க வேண்டுமென கூறி தகராறில் ஈடு பட்டுள்ளனர்.
கணபதி ஏற்கனவே நன்கொடை கொடுத்து விட்டதாகக் கூறி, ரசீதைக் காட்டியுள்ளார். இவ்வாறு கூடுதல் பணம் தர மறுத்து ரசீதைக் காட்டி யதால் ஆத்திரமடைந்த இந்து முன் னணி குடிபோதைக் கும்பல், கணபதி யின் தள்ளுவண்டிக் கடையை சூறை யாடினர். கணபதியையும் தாக்க முயன்றுள்ளனர்.
இதுகுறித்து கணபதி, அனுப்பர் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்து முன்னணியைச் சேர்ந்த ராசுக்குட்டி (29) என்பவரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்து முன்னணி அமைப்பு வழக்கம் போல, கடை யைச் சூறையாடியவர் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று ஓடி ஒளிந்து கொண்டுள்ளது. ஆனால் ராசுக்குட்டி பெயர் அச்சிடப்பட்ட இந்து முன்னணி நோட்டீஸ் மற்றும் அவர் கொடுத்த ரசீது ஆகியவை அவர் இந்து முன்னணியைச் சேர்ந்தவர் தான் என்பதை தெளிவாக உறுதிப்படுத்தியிருக்கின்றன.