districts

குடிநீர் திட்டக் குழாய்கள் திருட்டு  இருவர் கைது

அவிநாசி, ஜூலை 29- அவிநாசி அருகே கூட்டுக்குடிநீர் திட்டக் குழாய்களை திருடிய இரண்டு பேரை காவல் துறையினர் வியாழனன்று கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி காவல் ஆய்வாளர் வெங்க டேஸ்வரி, உதவி ஆய்வாளர் பார்த்திபன், காவல் வேனு கோபால், ஹரி, ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் பழங் கரை அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டி ருந்த இரு நபர்களை காவல் துறையினர் பிடித்து விசா ரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள், நெல்லை மாவட் டம், திசை நெல்லைப் பகுதியைச் சேர்ந்த முருகன் (33), ஈரோடு மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கோபால் (52)  என்பது தெரியவந்தது.

மேலும், இவர்கள் கடந்த ஞாயிறன்று அவிநாசி அருகே ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக இருப்பு வைத்திருந்த  2 ஆயிரத்து 500 மீட்டர் குழாய்களைத் திருடிச் சென்றவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கோபால்,  முருகன் ஆகியோரை கைது செய்த னர். இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான குடிநீர் குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

;